tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 23 September 2010

தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா? தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும். 961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்? விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

Tuesday, 21 September 2010

பிளாக்கர் பதிவில் வீடியோ அப்லோடு செய்ய ??????

பெரும்பாலான பதிவர்கள் தமது பதிவில் வீடியோ இணைக்க முடியவில்லையே என நினைப்பதுண்டு. அவர்களுக்காகவே இந்த பதிவில் எப்படி பதிவில் வீடியோவை இணைப்பது என்பது பற்றி எழுதியுள்ளேன்.

இதை செய்ய நீங்கள் புதிய எடிட்டர் உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய எடிட்டரிலேயே இந்த வசதி உள்ளது. இதனை செய்ய கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.

1, முதலில் உங்கள் பிளாக்கரில் SETTINGS > BASIC செல்லவும்.

2, அந்த பக்கத்தில், கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு பகுதி இருக்கும். அதில் Old Editor செலக்ட் செய்து கொள்ளவும்.




3, பின்பு நீங்கள் பதிவு எழுதும் பக்கத்தில் "பிலிம் சுருள்" போன்ற ஒரு ஐகான் இருக்கும்.
அதனை கிளிக்கவும்.


4, "Choose File" என்பதனை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள வீடியோவை இணைக்கலாம். பின்பு உங்கள் வீடியோ-விற்கு ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளவும்.

5, "Upload Video "என்ற பட்டனை கிளில் செய்வதன் மூலம் உங்கள் பதிவில் வீடியோ-வினை இணைத்து கொள்ளலாம்.


பின்குறிப்பு : இந்த வசதி புதிய எடிட்டரில் இல்லை. பழைய எடிட்டரில் மட்டும் உள்ளது.


Read more: http://therinjikko.blogspot.com/search?updated-max=2010-08-29T09%3A57%3A00%2B05%3A30&max-results=1#ixzz10BErbTbK

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்


ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும்.
அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து.
உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து தான் ச‌ர்ச் கீயுப்பும்.
அது மட்டுமல்ல இணையதளங்களை இணையதுண்டுகளாக (த‌ம்ப்ஷாட்) காட்ட தம்ப்ஷாட்ஸ் இணையசேவையை பயன்படுத்துகிறது.
அதாவ‌து ச‌ர்ச் கியூப்பும் கூகுல் தேடிய‌ந்திர‌த்தையே ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.ஆனால் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் தான் வித்தியாச‌ம் காட்டுகிற‌து.உணமையில் இது தேட‌ல் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிட்டு தரவில்லை.அத‌ற்கு மாறாக‌ முப்ப‌ரிமான‌ ச‌துர‌மாக‌ தேட‌ல் ப‌ட்டிய‌லில் உள்ள‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை இட‌ம்பெற‌ வைக்கிற‌து.
இணைய‌த‌ள‌ங்க‌ளின் துண்டு தோற்ற‌ம் (த‌ம்ப்ஷாட்)இந்த‌ ச‌துர‌ம் சுழன்று கொண்டே இருக்கும்.ச‌துர‌த்தில் ஏதாவ‌து ஒரு இட‌த்தில் ம‌வுசை கொண்டு சென்றால் அருகே அந்த‌ இணைய‌த‌ள‌த்தின் அறிமுக‌ம் வ‌ந்து நிற்கிற‌து.அதில் கிளிக் செய்தால் த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.
இணைய‌த‌ள‌ங்க‌ள்,இணைய‌ ப‌க்க‌ங்க‌ள்,செய்திக‌ள்,வீடியோ,புகைப்ப‌ட‌ங்க‌ள்,என‌ எல்லாமே இந்த‌ சதுர‌த்தில் இருக்கின்ற‌ன‌.மொத்த‌ம் 96 இணைய‌ துண்டுக‌ள் இவ்வாறு இட‌ம்பெற்றுள்ள‌ன‌.
வ‌ரிசையாக‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து பார்த்து ஏற்ப‌ட்ட‌ க‌ளைப்பு இந்த‌ ச‌துர‌த்தை பார்த்த‌ மாத்திர‌த்தில் வில‌கிவிடும்.
ச‌துர‌த்தை மேலும் கீழாக‌வோ ப‌க்க‌வாட்டிலோ புர‌ட்ட‌லாம்.இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்ப‌டி என்று த‌னியே குறிப்பும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அநேக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்படி? என‌ விள‌க்க‌ம் அளிக்கும் அபூர்வ‌ தேடியந்திர‌ம் இதுவாக‌ தான் இருக்கும்.
ச‌ர்ச் கியூப்பை சூப்ப‌ர் தேடிய்ந்திர‌ம் என்று சொல்ல‌ முடியாவிட்டாலும் முடிவுக‌ளை காண்பிக்கும் வித‌த்தில் சின்ன வித்தியாச‌த்தை செய்து க‌வ‌ர்ந்திழுக்கிற‌து.
காட்சிரீதியாக‌ முடிவுக‌ளை காண்பிப்ப‌து என இத‌னை ச‌ர்ச் கியூப் குறிப்பிடுகிற‌து.வெகு கால‌ம் முன் விவிஸ்மோ தேடிய‌ந்திர‌ம் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் புதுமையை புகுத்த‌ முய‌ன்றது நினைவிருக்க‌லாம்.விவிஸ்மோ முடிவுக‌ளை பட்டியலிடும் முறையில் இருந்து வில‌கி அவ‌ற்றை வ‌ரைப‌ட‌ம் போல‌ காட்ட‌ முய‌ன்ற‌து.ஆனால் விவிஸ்மோ இப்போது பயன்பாட்டில் இல்லை.
அந்த‌ வ‌ரிசையில் இப்போது ச‌ர் கியுப் அறிமுக‌மாகியுள்ள‌து.
எத‌யும் காட்சி ரீதியாக‌ அணுக‌ விரும்புகிர‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் பிடித்திருக்கும்.
ஆனால் இத‌னை முழுமையாக ப‌ய‌ன்ப‌டுத்த‌ பிளேஷ் வ‌ச‌தி தேவை.
சர்ச் கியூப் உங்களுக்கு பிடித்திருந்தால் அதே பாணியில் வேறு சில தேடிய்ந்திரங்களும் இருக்கின்றன.அவற்றில் ரெட்ஜீயை மிகவும் சிரப்பானது என்று குறிப்பிடலாம்.
அழகிய வரிக்குதிரையின் லோகோ வரவேற்கும் இந்த தேடியந்திரம் வண்ணமயமான பின்னணியில் மாமுலான தேடியந்திரம் போலவே இருக்கிறது.ஆனால் தேடு என கட்டளையிட்ட பின் இதன் தனித்துவம் தெரிகிறது.
தேடல் முடிவுகள் இணையதளங்களின் துண்டு தோற்றங்களாக அரை வட்டமாக தோன்றுகின்றன.வட்டத்தை பக்கவாட்டில் நகர்த்தினால் புதிய இணையதளங்களின் தோற்ற‌த்தை பார்க்க முடியும்.அவை பற்றிய‌ குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.
இதே போல ஆஸ்கோப் தேடியந்திரமும் முடிவுகளை காட்சி ரீதியாக தருகிறது.
———–
http://www.search-cube.com/

Tuesday, 31 August 2010

விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்!



விவேகானந்தரின்
மந்திர வார்த்தைகள்!


சுவாமி விவேகானந்தர், மாக்களை மக்களாக்கவும், மனிதர்களைப் புனிதர்களாக்கவும் வந்த இனியவர். அவரது வார்த்தைகளுக்கு இருந்த சக்தி மகத்தானது.

சுவாமிஜியின் கருத்துக்களின் மகிமையை உணர்ந்த மகாத்மா காந்தி, அதனால் தமது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்ததாகக் கூறினார்.

சுவாமிஜியின் வாழ்க்கையைப் படித்த நேதாஜி, அவரது காலடியில் அமர்ந்து ஆன்மிகப் பாடம் பயில விரும்புவதாகக் கூறினார்.

பாரதியார், ‘சுவாமி விவேகானந்தரின் வேதாந்தப் பிரசாரமானது, இந்திய விடுதலை முயற்சிக்குத் தாய் முயற்சி ஆகும்’ என்றார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரொமா ரோலா, சுவாமிஜியின் சக்திமிக்க வார்த்தைகளை முப்பது வருடத்துக்குப் பிறகு படித்தபோதும், தம்முள் ஒரு மின்சார சக்தி பாய்வதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சக்தியைத் தலைவர்களும் அறிஞர்களும் மட்டுமா உணர்ந்தார்கள்? இல்லை. சிரத்தையுடன் கேட்ட ஒவ்வொருவருக்கும் அது கிடைத்தது.

ஐம்பதாண்டுகளில் வணங்க
வேண்டிய தெய்வம்

இந்திய அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் நம் தலைவர்கள் தீவிரவாதம், மிதவாதம் என்று பிரிந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். சுதந்திரம் கிடைத்த பிறகு, அதை நல்ல முறையில் அனுபவிக்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணவும் மக்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.

அப்படி முயன்றவர்களுக்கு முதல் உத்வேகம் தந்தவர் சுவாமி விவேகானந்தர்தான். ஆங்கிலேயரை விரட்டும் முன்பு நாம் பாரதத் தாயிடம் பக்தியும், சிரத்தையும் கொண்டு அவளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது விவேகானந்தரின் எண்ணம்.

அதற்காக அவர், ‘இனி வரும் 50 ஆண்டுகளுக்கு நம் ஆதார சுருதி, ஈடு இணையற்ற நம் இந்தியத் தாயாக இருக்கட்டும். அதுவரை மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து மறைந்து விடட்டும்’ என்றார் (சென்னையில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு ‘இந்தியாவின் எதிர்காலம்’).

சுவாமிஜி அவ்வாறு கூறியது 14.2.1897-ல். அந்த ஆண்டுடன் ஓர் ஐம்பதைக் கூட்டிப் பாருங்கள்.

அங்கு வருவது 1947 மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரமும்தான்.

இந்தியா மீது எப்போது
பக்தி வந்தது?


சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி கிறிஸ்டீன். அவர் தமது நினைவலைகளில் மூழ்கி ஒரு முத்தை எடுத்து நம் முன் வைக்கிறார். ‘எங்களுக்கு (மேலைநாட்டுச் சீடர்கள்) இந்தியா மீது எப்போது பக்தி வந்தது தெரியுமா?’ என்று கேட்டு, அவரே பதிலைக் கூறுகிறார்.

“சுவாமிஜி தமது மதுரமான குரலில் ‘இந்தியா’ என்ற வார்த்தையை உச்சரித்த அன்றே, எங்களுக்கு இந்தியாவின் மீது பக்தி உண்டாயிற்று.”

இந்தியாவை நேசி!

மிஸ். மெக்லவுட், சுவாமிஜியின் மற்றொரு சிஷ்யை. அமெரிக்காவின் சிறந்த பெண்மணி. மிஸ். மெக்லவுட், மேல்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தின் திரட்சி சுவாமிஜி என்று உணர்ந்திருந்த மெக்லவுட் அம்மையார், மேலைநாடுகளில் அவரது சிந்தனைகளை முழு மூச்சுடன் பரப்பி வந்தார். பல நல்ல காரியங்களை அவர் செய்வதற்கு அவருக்குச் சக்தி எங்கிருந்து கிடைத்தது?

தமது குருவான சுவாமிஜியிடம் மெக்லவுட் ஒரு முறை, ‘சுவாமிஜி, உங்களுக்கு எந்த வகையில் நான் சேவையாற்ற வேண்டும்?’ என்று கேட்டார்.

சுவாமிஜி அப்போது தீர்க்கமாக, ‘லிஷீஸ்மீ மிஸீபீவீணீ (இந்தியாவை நேசி)’ என்றார்.

மந்திரம் போன்ற அந்த அறிவுரைதான் அவரை அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட வைத்தது; இந்திய வாழ்க்கை முறையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கவும் வைத்தது.

இந்தியாவை மறந்துவிடு!

சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிகப் பிரசாரம் செய்தார். மேலைநாட்டுச் சிந்தனைகளிடையே இன்று நாம் காணும் ‘இந்தியச் செல்வாக்கு’ சுவாமிஜியால் துவங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பல ஆன்மிகச் சாதகர்களுக்கு உண்மையான ஆன்மிகத்தை வழங்க நினைத்தார் அவர்.

உலகுக்கும், சிறப்பாக இந்தியாவுக்கும் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருந்த அவருக்கு, ஆன்ம தாகம் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே உடனிருந்து ஆன்ம சாதனைகளைக் கற்றுத் தர நேரமிருந்தது.

அதனால் சுவாமிஜி தமது சகோதரச் சீடரான சுவாமி துரியானந்தரை அமெரிக்காவுக்கு வரவழைத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தை இது.

‘மேலைநாட்டினருக்கு உண்மையான ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்து காட்டு; இந்தியாவை மறந்துவிடு.’

அதன்படி சுவாமி துரியானந்தர் அமெரிக்கா சென்று சாந்தி ஆசிரமம் என்ற ஒன்றை ஆரம்பித்துப் பல சாதகர்களை உருவாக்கினார். இன்றும் அந்த இடம் சாதகர்களுக்கு ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டுவதாக விளங்குகிறது.

மறந்துவிடு வங்காளத்தை!

ஹரித்துவார் பகுதியில், பல சாதுக்களும் யாத்ரீகர்களும் போதிய மருத்துவ வசதியின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரச்னை ஆண்டவனிடமிருந்து அவர்களது மனங்களை அடிக்கடி திசை திருப்பிக் கொண்டிருந்தது.

சுவாமி விவேகானந்தர் தமது பரிவ்ராஜக காலத்தில் அங்கு சென்றிருந்தபோது அதைக் கவனித்திருந்தார்.

அதனால் அவர் தமது சீடர் சுவாமி கல்யாணானந்தரிடம், அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற பல வகையிலும் தூண்டினார். முடிவில், ‘மக்களுக்குச் சேவை செய், வங்காளத்தை மறந்துவிடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அன்று சுவாமிஜி கூறிய அந்த மந்திரச் சொற்கள் இன்றும் எப்படிச் செயலாற்றுகின்றன தெரியுமா?

தம் முழு ஆற்றலையும் திரட்டி சுவாமி கல்யாணானந்தர், ஹரித்துவாரில் சேவாசிரமத்தை ஆரம்பித்து அங்குள்ள ஏழை எளியவருக்கும், யாத்ரீகர்களுக்கும் மருத்துவ சேவை செய்து வந்தார். அவரது உழைப்பாலும், தியாகத்தாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக இன்றும் அந்த சேவாசிரமம் செம்மையாக இயங்கி வருகிறது.

‘வங்காளத்தை மறந்துவிடு’ என்று சுவாமிஜி கூறியதை கல்யாணானந்தர் அப்படியே ஏற்றுக் கொண்டார். அதனால் 30 வருடங்களுக்கும் மேல் கங்கலில் பணியாற்றிய சுவாமி கல்யாணானந்தர், தம் சொந்த மாநிலமான வங்காளத்துக்கு ஒருமுறைகூடச் செல்லவில்லை. குரு வாக்கியத்தை மதிப்பது அந்தத் துறவிக்குத்தான் என்னே நிஷ்டை!

‘இந்தியாவை நேசி!’ ‘இந்தியாவை மறந்துவிடு!’

இப்படி, ‘இந்தியாவை நேசி’ என்று கூறி, சுவாமிஜி ஒரு சீடருக்கு உத்வேகம் ஊட்டினார். மறுபுறம் மேலைநாட்டு மக்களும் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மற்றொருவரைச் சேவை செய்யவும் தூண்டினார். அதற்காக ‘இந்தியாவை மற’ என்றார்.

இப்படி யார் யாருக்கு எந்தெந்த உபதேசங்களைத் தந்தருள வேண்டும் என்று ஒரு சிறந்த குருவால் மட்டுமே போதிக்க முடியும்.

சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், தங்களது துறைகளில் சாதனை புரிந்தார்கள் என்பதை நாம் மேலே கண்டோம். அவரது வார்த்தைகளை இன்று படிப்பவர்களுக்கும் அந்தச் சக்தி வருமா?

ஆம். அவரது வார்த்தைகளுக்கு அன்றும் சக்தி இருந்தது. இன்றும் சக்தி உண்டு.

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும், சாதிக்க நினைப்பவர்களுக்கும் சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும், இறைவனுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுக்கும், அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன.

தனி மனித, சமூக முன்னேற்றத்துக்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார்.

அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே, அவை நம்முள் கிளர்ந்தெழச் செய்யும் சக்தியைக் கொண்டே நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.

இதோ சில சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

‘நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.’

‘எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே உள்ளன. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.’

‘நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக வேண்டும்; ஆகியே தீர வேண்டும் என்பதே நான் கூறுவது.’

சுவாமிஜியின் இதுபோன்ற பொன்மொழிகள் உணர்ச்சி வேகத்தில் கூறப்பட்டவை அல்ல.

சுவாமி விவேகானந்தர் தமது ஒரு கடிதத்தில், ‘யாரெல்லாம் இந்தக் கடிதத்தைப் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் என் சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள்...’ என எழுதியுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், ‘நான் உங்களுடன்தான் இருக்கிறேன். நான் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகும் எனது சக்தி உங்களுடன் செயல்படும்’ என்கிறார்.

சுவாமிஜியின் சீடர் மன்மதநாத் கங்குலி. அவர் ஒருமுறை சுவாமிஜியிடம், ‘சுவாமிஜி, நான் உங்களது சொற்படி நடக்காமல், வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின் எனக்கென்ன நடக்கும்?’ என்று கேட்டார்.

உடனே சுவாமிஜி அந்தச் சீடரைத் தீர்க்கமாகப் பார்த்து, ‘நீ எங்கு சென்றாலும், எந்த ஆழத்துக்குச் சென்றாலும் உன் குடுமியைப் பிடித்து இழுத்தாவது உன்னைக் கரையேற்ற வேண்டியது என் கடமை’ என்றார்.

இப்படி குருசக்தியுடன் கூடிய சுவாமி விவேகானந்தரின் திருவுருவமும், கருத்துகளும், அவரது சாந்நித்தியமும் நம்முள் பேராற்றலைத் தூண்டக்கூடியவை. அந்த அருளார்ந்த சக்தியை வாரி வாரிப் பருகுவோம்.


சுவாமி விமூர்த்தானந்தர்
ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Thursday, 5 August 2010

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?
டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.
140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.
டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.
அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.
டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.
இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.
டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.
இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.
நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.
போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.
மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?
இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.