tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday, 29 November 2010

டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்.


       டிவிட்டருக்கு பலவிதமான பயன்கள் உண்டு.கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றுக்கு பின்தொடர்பாளர்கள் பதில் தெரிவிக்கும் போது அவர்களோடு அழகான உரையாடலிலும் ஈடுபடலாம்.
இவ்வளவு ஏன்,ஏதாவது சநதேகம் என்றாலோ அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தேவை என்றாலோ டிவிட்டரில் கேள்வி கேட்டு பதிலும் பெறலாம்.உதாரணத்திற்கு வெளியூர் பயணம் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அந்த ஊரில் எங்கு தங்கலாம்,எந்த ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பது போன்ற கேள்விகளை டிவிட்டர் மூலம் கேட்கலாம்.
உள்ளூர் ஞானம் மிக்க டிவிட்டர் அன்பர்கள் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்ககூடும்.என்ன படம் பார்க்கலாம்,என்ன புத்தகம் படிக்கலாம் போன்ற கேள்விகளை கூட டிவிட்டரில்,கேட்கலாம்.
பதில் தேவைப்படும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் டிவிட்டரில் கேட்கலாம் என்றாலும் இந்த கேள்விக்கு உரிய பதில் கிடைப்பது ஒருவரது டிவிட்டர் ஆதரவை பொறுத்தே அமையும்.அதிக பின்தொடர்பாளர்களை பெற்றிருந்தால் பதில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.அதே போல வெறும் தற்பெருமைகளோடு நின்று விடாமல் பின்தொடர்பாளர்களோடு உரையாடலில் ஈடுபட்டு நல்ல டிவிட்டர் நட்பை வளர்த்துக்கொண்டிருந்தால் பதில்களிலும் வேகம் இருக்கும்.
ஆனால் டிவிட்டரில் தங்களுக்கென ஒரு சமூகத்தை ஏற்படுத்திகொள்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை.அதற்காக டிவிட்டர் கேள்வி கேட்க நினைப்பவர்கள் தங்களுக்கு போதிய ஆதரவு இல்லையே என வருந்த வேண்டியதில்லை.டிவிட்டர் கேள்வி கேட்டு உரிய பதிலை பெறுவதற்காக என்றே தனியே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிவிட் ஹெல்ப் என்னும் அந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகள் தாங்கள் பதில் பெற விரும்பும் கேள்விகளை சமர்பிக்கலாம்.யாருக்கு பதில் தெரியுமோ அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்.
ஏற்கனவே இணையவாசிகளுக்கு நன்கு அறிமுகமான யாஹூ ஆன்ஸரஸ் சேவையை போன்றது தான் இது.டிவிட் ஹெல்பே தன்னை டிவிட்டருக்கான யாஹூ ஆன்ஸர் என்று தான் வர்ணித்துக்கொள்கிறது.கூடவே மக்களால் இயக்கப்படும் தேடியந்திரம் என்றும் வர்ணித்துக்கொள்கிறது.
அதாவது கூகுலில் பதில் தேடுவதற்கு பதில் பரந்து விரிந்திருக்கும் டிவிட்டர் சமூகத்திடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்னும் அர்த்தத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்விகள் கேட்பது மிகவும் சுலபம்.டிவிட்டர் முகவரி கணக்கு மூலம் உள்ளே நுழைந்து எந்த கேள்விக்கு பதில் தேவையோ அதனை கேட்க வேண்டியது தான்.இதற்கென கேட்கவும் என்னும் தனிப்பகுதி இடம் பெற்றுள்ளது.அதே போல உங்கள் டிவிட்டர் பக்கத்திலேயே கேள்வியை பதிவு செய்து விட்டு அதனுடன் டிவிட் ஹெல்ப் என குறிப்பிட்டாலும் போதுமானது.
கேல்விகளை பொதுவாகவும் கேட்கலாம்.அல்லது தேவைப்பட்டால் குறிப்பிட்ட நிபுணரிடமும் கேட்கலாம்.ஆனால் கட்டணம் உண்டு.இருப்பினும் பதிலில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.
இது வரை 4 லட்சத்திற்கு மேலான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக முகப்பு பக்கத்தில் பெருமையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான கேள்விகளை இங்கே கேட்கலாம் என்ற சந்தேகம் எழலாம்.அதற்கு வரையரையே கிடையாது.பதில் தேடும் எந்த கேள்வியையும் கேட்கலாம்.
தளத்தில் பதில்கள் வேண்டி சம்ர்பிக்கப்பட்டுள்ள கேள்விகளை ஒரு முறை நோட்டம் விட்டால் எத்தனை வகையான கேள்விகள் என்ற வியப்பு ஏற்படுகிறது.
முழுநீள திரைப்படங்களை பார்க்க உதவும் இணையதளம் ஏதாவது தெரியுமா?சமையல் குறிப்புகளை தரும் இணையதளத்தை சொல்லுங்கள்? எனபதை போல இணையதள முகவரிகளை கேட்கும் கேள்விகள் ஒரு வகை என்றால்,துக்கம் வரவில்லை,யாராவது தூங்குவதற்கான வழி தெரிந்தால் சொல்லுங்களேன் போன்ற கேள்விகளும் சமர்பிக்கப்படுகின்றன.
ஜீ 6 என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்களேன் என்று ஒருவர் கேட்டிருக்கிறார் என்றால் இன்னொருவர் கட்டிட கலை பயிற்சி வகுப்புகள் நடக்கும் இடம் பற்றி கேட்டிருக்கிறார்.இன்னொருவரோ போரடிக்கிறது,ஸ்கைப்பில் பேச ஆள் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.
புதிதாக வந்த படத்தில் எது பார்ப்பது போல உள்ளது போன்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எல்லாமே புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்கும் கேள்விகள் என்று சொல்ல முடியாது.சில மிகவும் எளிமையானவை.சில கருத்துக்களை எதிர்பார்ப்பவை.
புதிதாக துவங்கப்பட்டுள்ள இணையதளத்தில் உறுப்பினராக சேர விருப்பமா என விளம்பர நோக்கிலான கேள்விகளும் உண்டு.
பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரு சில பதில்களாவது பதிவாகியுள்ளன.
கேள்விகளுக்கு பதில் கிடைப்பதோடு அதன் மூலமே புதிய நட்பையும் தேடிக்கொள்ளலாம்.குறிப்பிட்ட கேள்விக்கு சரியான பதிலை தருவதன் மூலம் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தி தொடர்பு கொண்டு நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு நல்ல கேள்வி கேட்டு அதற்கு அசத்தலான பதில் அளிப்பவரை அடையாளம் கண்டு அவரையே நண்பராக்கி கொள்வது சாத்தியம் தானே.கேள்வி கேட்பது மட்டுமல்ல குறிப்பிட த்லைப்பில் கில்லாடி என கருதுபவர்கள் அந்த ஏரியா தொடர்ப்பான் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்களை தந்து தங்கள் நிபுணத்துவதை உணர்த்தலாம்.
இதற்கேற்றார் போல் பதில் சொல்பவர்களுக்கு பலவிதமான பட்டைகளையும் தளம் வழங்குகிறது.
கேள்விகளோடு தான் இந்த தளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்றில்லை.எப்போது வேண்டுமானாலும் இந்த தளத்திற்கு சென்று இங்குள்ள கேள்விகளை நோட்டம்விடலாம்.புதிய கேள்விகளை பார்ப்பது மூலம் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.இணையதளம்,இசை,வேலை,வலைப்பதிவு,வீடியோ என பல்வேறு குறிச்சொற்களின் கீழ் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன .எனவே எதில் ஆர்வம் உள்ளதோ அதனை தேர்வு செய்து கேள்விகளை பார்க்கலாம்.
———
http://twithelp.me/

Saturday, 27 November 2010

உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்ற‌ன. நவீன மொபைல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.

பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். மொபைல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எறியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு மொபைல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே? இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. 

சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது. இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.

இமெயில் அனுப்ப முடியாது.வை பை வசதி எல்லாம் இல்லை, பேஸ்புக் பார்க்க முடியாது.கேமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியாது. இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.

அவ்வளவே. உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்திருக்கிறது.மொபைல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜான்ஸ்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை. 

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து. 

அலங்கார ரிங்டோன் எல்லாம் இல்லாமல் தொழில்நுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த மொபைல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.

அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும். அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம். 

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில் தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும். 

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய, அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான மொபைல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது. நவீன வாழ்வின் சிக்கல்கள் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.

பேசப்பேச சார்ஜ் ஆகும் மொபைல் போன் ?

மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும்.

இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.

அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது.

எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்.

இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

3ஜி சேவை


பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது.

தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன.

இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.

1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்:

3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.

2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்:

3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

3. மொபைல் ஒரு முனையமாக:

மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.

4. வீடியோ ஸ்ட்ரீமிங்:

நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.

5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP):

மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.

6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்:

பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.

7. துல்லிய ஒலி அனுபவம்:

சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும்.

உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம்.

இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

ப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.


வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே.
சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார்.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக வைரஸ் கம்ப்யூட்டர் ,லேப்டாப்,ஸ்மார்ட் போன் செல்போன் என பரவி தற்போது மனித சிப்புக்குள்ளும் நுழைந்து விட்டது.இதனை உலகிற்கு உணர்த்திய பேராசிரியரின் செயல் துணிச்சலானது;அதே நேரத்தில் தொலை நோக்கு மிக்கது.
பேராசிரியர் மனித குலத்தின் நலனுக்காக தன்னையே சோதனை கூடமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
எல்லாம் சரி பேராசிரியரின் உடலுக்குள் சிப் வந்தது எப்படி?அதை ஏன் அவர் விரும்பி வைரஸ் உலாவும் வாகனமாக மாற்ற வேண்டும்?
இந்த கேள்விக்கான பதில் கேசன் ஆர்வம் காட்டும் துறையில் அடங்கியிருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலையில் பேராசிரியார பணியாற்றும் சைபர்நெட்டிக்ஸ் துறையின் நிபுணராக அறியப்படுகிறார்.சைபர்நெட்டிக்ஸ் என்பது கம்ப்யூட்டர் சார்ந்த பொது வார்த்தை. அதற்கு பரந்து விரிந்த அர்த்தம் உண்டு.மனிதன் மற்றும் இயந்திரங்கள் சந்திக்கும் புள்ளி தொடர்பான ஆய்வும் இதில் அடங்கும்.
இந்த உறவில் ஆர்வம் கொண்டவர் தான் காசன்.
ஆம் மனித குலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதோடு நில்லாமல் அதனை தழுவிக்கொள்ளவும் முயன்று வருகிறது.இதன் பயனாக மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான தொடர்பு,உறவு மேலும் நெருக்கமாகி கொண்டிருக்கிறது.உடல் உறுப்புக்குள் கம்ப்யூட்டர் சிப்பை பொருத்திக்கொள்வது தான் இதன் முதல் படி.
ஒரு சிப்புக்குள் ஒராயிரம் விஷயங்களை அடக்கிவிடலாம் இல்லையா? இந்த ஆற்றலை பயன்படுத்தி சின்ன்சஞ்சிறு சிப்பை உடலின் ஒரு அங்கமாக்கி ஹைடெக்கான செயல்பாடுகளை சாத்தியமாக்கிகொள்ளலாம்.உதராணமாக கையில் சிப்பை வைத்து கொண்டு அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தாலாம்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பிரபலாமான கடற்கரை விடுதியில் விஐபி உறுப்பினர்களுக்கு இப்படி கை விரலுக்குள் பொருந்திய சிப்பை அடையாள அட்டையாக வழ்ங்கியுள்ளனர்.அந்த சிப்புக்குள் அவர்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விடுதிக்குள் நுழையும் போது அவர்கள் கை காட்டினால் போதும் கம்ப்யூட்டர் அவர்கள் யார் என்பதை புரிந்து கொன்டு உள்ளே அனுமதித்துவிடும்.வாயிலில் நின்று பதில் சொல்ல வேண்டியதில்லை.
அதே போல விடுதியில் இருந்து வெளியேறும் போது உறுப்பினர்கள பயன்படுத்திய வசதிகளுக்கான தோகையும் சிப்பில் தானாகவே கணக்கிடப்பட்டிருக்கும்.கட்டணம் செலுத்தக்கூட இதனையே பயன்படுத்தலாம்.
பார்சிலோனா கடற்கரை விடுதி கோடிஸ்வர வாடிக்கையாளர்களூக்கான விஷேச வசதியாக் ஒரு புதுமைக்காக இதனை அறிமுகம் செய்துள்ளது.ஆனால் காலப்போக்கில் இப்படி சிப்பை சொருகி கொள்வது மேலும் பரவலாகிவிடும் என்று கருதப்படுகிறது.
இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.ஏற்கனெவே இத்தகைய சிப்களை விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மற்றும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ய பயன்படுத்தி வருகிறோம்.
இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று மனித செயலபாடுகளையும் சிப்புகளால் மேம்படுத்தலாமே என்று நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இது தொடர்பான பல்வேறு சோதனை மற்றும் முன்னோடி முயற்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
அர்சி அளவுக்கு ஒரு சிப்பை கை விரல் போன்றவற்றில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்டால் மந்திரக்கோல் போல மாயங்களை நிகழ்த்தலாம்.
இவ்வளவு ஏன் தனியே ஏடிஎம் கார்டுகளே தேவைப்படாது.கையில் உள்ள சிப்பையே கார்டாக பயன்படுத்தலாம். அப்படியே ஒருஅரின் பருத்துவ விவரங்களையும் சிப்பிலேமித்து வைக்கலாம்.அவசர நிலையின் போது அந்த சீப்பை ஸ்கேன் செய்தால் போதும் அவரின் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம்.
இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.விஷயம் என்னவென்றால் மனிதனும் இயந்திரமும் நெருங்கி வருகின்றன.
இப்போது பெரும்பாலும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் மனித இயந்திர கலப்பு நடைமுறை முக்கியத்துவம் பெறலாம்.அப்போது ஏற்படக்கூடிய விளைவுகளை பயன்களை ஆய்வு செய்து பார்ப்பது தான் பேராசிரியர் காசனின் நோக்கம்.
கம்ப்யூட்டர் சிப் என்றதும் வைரஸ் இல்லாமல் இருக்குமா?இந்த வைரஸ் மனித சிப்பையும் பாதிக்குமா? இப்படி ஒரு சந்தேகம் காசனுக்கு ஏற்பட்டதன் விளைவாகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரசை ஏற்றிவிட்டார்.பின்னர் அந்த சிப்பை பயன்படுத்திய போது மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் வைரஸ் பரவியது.
இது காசன் எதிர்பார்த்தது தான். உடலுக்குள் பொருத்தப்படும் சிப் வைரஸால் பாதிக்கப்படால் விபரீதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதிய அவர் இதனை நிருபித்தும் காட்டியிருக்கிறார்.
யோசித்துப்பாருங்கள் நாளை யார் வேண்டுமானாலும் கையில் வைரஸை வைத்துக்கொண்டு உலக கம்ப்யூட்டர்களை செயல் இழக்க வைக்கலாம்.தெரியாமலும் இந்த விபரீதம் நிகழலாம்
இவற்றை ஏதோ அறிவியம் புனைகதை என்றும் அலட்சியப்படுத்தமுடியாது.பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் ஏற்கனவே ம்னித உடலுக்குள் நுழைந்தாகி விட்டது.மேலும் பல மருத்துவ பயன்பாடுகள் வர உள்ளன.
ஆக எதிர்காலம் இயந்திரங்களின் அதிசயம் மற்றும் ஆபத்துக்கள் நிரைந்ததாகவே இருக்கிறது.