tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Tuesday, 29 March 2011

சொல்லாததையும் செஞ்சாங்கல்ல... திமுக


‘‘சொன்னதை மட்டுமல்ல

சொல்லாததையும் செய்தது திமுக அரசு”

அப்படின்னு அடிக்கடி திமுக தலைவர்களும் கூட்டணிக் கட்சிக் காரங்களும் பேசறாங்களே அதுக்கு என்னப்பு அர்த்தம்? எனக்கு ஒரு சந்தேகம். சொல்லாததை எப்படி அப்பு செய்ய முடியும்?

என்னலே. சுத்த மொண்ணையா இருக்க. செல்போன் கம்பெனி களுக்கு லைஸென்ஸ் குடுக்குற விஷயத்துல மத்திய மந்திரியா இருந்த ராசா 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்வார்னு சொன்னாங்களா? சொல்லல, ஆனா செஞ்சாங்கல்ல...

ஓ...நீயி அப்படிவர்ரியா? இப்பத் தான் புரியுது. ஊழல்ல மாட்ற மந்தி ரிய ஜெயில்ல வச்சித்தான் ஸ்டா லின் மாதிரி தலைவரெல்லாம் பாப் பாருன்னு சொல்லல. ஆனா செஞ் சாங்க. சரிதான். அப்புறம். என்னல் லாம் சொல்லாதத செஞ்சாங்கப்பு...

ஆட்சிக்கு வந்தவொடனே ஆரம் பிச்சாங்க பாரு அடிதடி அரசியலு... சென்னை மாநகராட்சித் தேர்தல் ரணகளமாயிருச்சுல்ல. கையில வீச்சருவா, கார்ல உருட்டுகட்ட. கூட்டணியில இருந்த பாமக கூட பதறிப்போச்சுல்ல. கோர்ட்டுல கேச போட்டு 99வது வார்டுக்கு திரும்ப தேர் தல் நடந்துச்சு. அப்ப விழுந்த கரும் புள்ளிதான் போலீஸ் அதிகாரி லத் திகா சரணுக்கு. இப்ப நடக்குற தேர் தல்ல லீவு போட்டுட்டுப் போக வேண்டியதாயிருச்சு. இதையெல் லாம் சொன்னாங்களா? இல்ல... ஆனா செஞ்சாங்கல்ல.

நீதிக்குத்தல வணங்குறோம்னு வக்கணையா வசனம் பேசுவாங்க. ஆனா, நீதிமன்றத்துக்குள்ளயே போலீச ஏவி வக்கீல்கள மட்டுமல்ல நீதிபதியையே பதம் பாத்தாங்க. கருப்பு கோட்டெல்லாம் செவப் பாயி, பாத்துக்க இதுதான் கருப்பு சிவப்புன்னு காட்டுனாங்க. இதை யெல்லாம் சென்னாங்களா? இல்ல... செஞ்சாங்கல்ல..

சமச்சீர் கல்விய நாங்கதான் கொண்டாந்தோம்னு பீத்திக்கிறாங் களே. இதோட பின்னணி தெரி யுமா? முத்துக் குமரன் குழுன்னு ஒண்ண போட்டாங்க. அதோட அறிக்கைய கெணத்துல போட் டாங்க. அத அமல்படுத்துன்னு கேக் கப்போனாங்க எஸ்எப்ஐ மாணவர் கள். கோட்டையைக் கைப்பற்ற வந்துட்டாங்கன்னு காவல்துறை கண்மூடித்தனமா அடிச்சு நொறுக் குச்சு. இதைச் சொன்னாங்களா? இல்லியே. செஞ்சாங்கல்ல.

இன்னொண்ணையும் சொல் றேன் கேட்டுக்க. சென்னையில சட்டக் கல்லூரி இருக்கு. அதுவும் ஐகோர்ட்டு மூக்கு நுனியில. மாணவர்களுக்குள்ள மோதல். ஒரு குரூப்பு இன்னொரு குரூப்பைக் கொலவெறியோட தாக்குது. இதப் பாத்துகிட்டு செவர் வச்சமாதிரி நிண்ணுது போலீசு. இந்தக் காட்சிய மனசாட்சி உள்ள யாரும் மறக்க மாட்டாங்க. காவல்துறை கையாலா காததா கருணை இல்லாததா கட மையாற்றாததா இருக்கும்னு சொன்னாங்களா? இல்ல. செஞ்சாங் கல்ல.

ஒரேயடியா அப்படி சொல்லிட முடியுமா அப்பு? செல்போன் உதிரி பாக கம்பெனியில போராட்டம் நடத்துன சிஐடியு தலைவர கைது பண்ணி சட்டம் ஒழுங்க பாதுகாத் தங்கல்லியா?

ஆமாமா... நல்லா பாதுகாத் தாங்க. ஃபாக்ஸ்கான் கம்பெனிங் கிறது செல்போனுக்கு உதிரிபாகம் செய்யறது. இந்தக் கம்பெனியில தொழிலாளர்களுக்கு ஆதரவா ஜனநாயக முறைப்படிதான் போராட் டம் நடத்துனாங்க. தொழிலாளர் களின் தோழன்னு பேசுறவர் ஆட்சி யில போலீஸ் என்ன பண்ணுச்சி? சிஐடியு தலைவர் சவுந்தரராசன கைது பண்ணுச்சி-ஜெயில்ல அடைச் சுது. கோர்ட்டுக்குக் கூட்டிவரும் போது கையில வெலங்கு மாட்டிச்சு. வெளங்குமாலே இந்த அரசாங்கம்? இந்த மாதிரி அராஜகம் பண்ணு வோம்னு சொன்னாங்களா? இல்ல செஞ்சாங்கல்லியா?

அப்படியே இந்தப் பக்கம் வா. பெண்களுக்கு அதச் செய்றேன் இதச் செய்றேன்னு பெருமையா சொல்லிக்கிறாங்களே! லதாங்குறது சிபிஎம் கட்சியோட எம்.எல்.ஏ. அவங்கள போலீஸ் என்ன பண் ணுச்சி தெரியும்ல?

அவங்க மொதல்ல என்ன பண் ணினாங்கன்னு சொல்லுங்க அப்பு.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நாங்கதான் அஸ்திவாரம் போட்டோம்னு சொல்றாங்களே. இவங்க ஆட்சிக் காலத்துல காங்கியனூர் கோயிலுக்குள்ள தலித்துகள அழைச்சிகிட்டு போகலாம்னு புறப்பட்டாங்க. இதுதப்பா? பொண் ணுண்ணும் பாக்கல. எம்எல்ஏன்னும் பாக்கல, புடிச்சித் தள்ளி பூட்ஸ் காலால மிதிச்சு. சொல்ல முடியாத வேதன. பல நாள் ஆஸ்பத்திரியில படுக்கவச்சிட்டாங்க.

தலித் மக்கள மனுஷனாக்கிய சீனிவாசராவ் நினைவு நாளன்னிக்கு இப்படியெல்லாம் துவம்சம் பண்ணுவோம்னு சொன்னாங்களா? இல்லியே. ஆனா செஞ்சாங்கல்ல.

சொல்லாததையும் செய்வோம் கிறது இதுதானா? அம்மாடியோவ். இவங்க சங்காத்தியமே கூடாது அப்பு. இத ஊரு பூரா சொல்லி வைக் கிறேன் பாரு ஆப்பு.
திருப்பூர் ஜெகன்

Monday, 28 March 2011

திருப்பதி ஏழுமலையான் ஆலய வியப்பூட்டும் விஷயங்கள் மற்றும் ரகசியங்கள்.



ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்டம்பர் 2009) இதழிலிருந்து....

***


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.


3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.


4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.




***





திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.


*



1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.


***


நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்டம்பர் 2009)

தெரிந்து கொள்ளுங்கள்

* வெயிட் போடலியா?

வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்துவிடும். அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் "செக் அப்' செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம். அதுவே போதுமானது.
* பசியெடுக்கலியே…
சிலர் நன்றாக "உள்ளே' தள்ளுவர்; ஆனால், பசியே எடுக்கலே என்று புலம்புவர். இதனால், உடல் எடை கூடுவதுடன், சர்க்கரை , பிபி.,கோளாறும் வந்துவிடும். சத்தான உணவுகளை சாப்பிடுவது தான் நல்லது. அதை விட்டு, கண்ட நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது கெடுதல் தான்.
பசியெடுக்க ஒரே வழி உடற்பயிற்சி தான். வாரத்துக்கு நான்கு முறையாவது, தலா 40 நிமிடம் நடக்க வேண்டும். வண்டியை எடுக்காமல் நடந்து செல்லுங்கள்; பசியெடுப்பது மட்டுமல்ல, நல்லா தூக்கமும் வரும்.
* மூணு வேளை
இளம் வயதில் நன்றாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடனே கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடலாம். மூன்று முறை, பிரதான சாப்பாட் டையும், இரண்டு முறை நொறுக்குத்தீனியையும் சாப்பிடலாம். அப்போது பிரதான சாப்பாட்டு அளவை குறைத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால், கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்.
* மீனில் மட்டுமல்ல
ஒமேகா 3 கொழுப்பு ஆசிட் என்பது, உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருவது முதல், பல நன்மைகளை செய்கிறது. மீன் உணவில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது. சைவ உணவு பிரியர்களுக்கு இந்த சத்து இல்லாத உணவு இல்லாமல் இல்லை. ஆளி விதையை பவுடராக்கி, எண்ணெய் எடுத்து அதன் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதையை பவுடராக்கி தண்ணீரில் கலக்கி சாப்பிட்டு வரலாம். பாலில் கலந்து சாப்பிடலாம். சாலட்டிலும் பயன் படுத்தலாம். கீரை, முட்டைகோசு போன்வற்றிலும் இந்த சத்துக்கள் உள்ளன.
* பி.ஐ.எஸ்.,தான் ஆரம்பம்
சத்தான உணவு சாப்பிடாமல், எப்போதும் சாட், பிட்சா, ஐஸ்கிரீம், கூல் டிரிங்ஸ் ஆகிய வற்றை சாப்பிட்டு வந்தால், முதலில் வரும் கோளாறு, இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்' (பி.ஐ.எஸ்.,)தான். குடலில் ஏற்படும் ஒரு வித எரிச்சல், அழற்சி தான் இது. இது பெரிய கோளாறில் கொண்டு விடும். அதனால், முதலிலேயே கண்டுபிடித்து சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்துள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ஜூஸ் சாப்பிடுவதை விட, பழங்களை சாப்பிட வேண்டும். பிளாக் டீ, லெமன் ஜூஸ் குடிக்கலாம்; ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
* பூண்டு எதுவரை…
பூண்டு பற்றி சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் புரியாத புதிராகத்தான் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதை உணவில் சேர்த்துக்கொண்டால், பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால், கோளாறு வந்த பின் அதை அதிகமாக பயன்படுத்துவது பயனளிக்காது என்கின்றனர். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. ஆனால், வந்த பின் மருந்து தான் நல்லது; ஓரளவு பூண்டு பயன்படுத்தலாம் என்பது தான் நிபுணர்களின் லேட்டஸ்ட் ஆய்வு முடிவு.
* கோதுமை – மைதா
கோதுமை – மைதா எது நல்லது என்று தெரியுமா? கோதுமையில் மேல் இழை தான் நார்ச்சத்து நிறைந்தது; உள் இழையில் ஸ்டார்ச் சத்து உள்ளது. கோதுமையில் இரண்டு இழைகளும் இருப்பதால், அதன் மூலம் வைட்டமின் "பி' காம்ப்ளக்ஸ், கனிம சத்துக்கள் கிடைக்கின்றன. மைதாவில், இவை நீக்கப்படுவதால், 80 சதவீத நார்ச்சத்து, 20 சதவீத ப்ரோட்டீன் நீக்கப்படுகிறது.
* மலட்டுத்தன்மைக்கும்
இளம் வயது பெண்களின் மோகம், இப்போது வாசனை திரவியங்களில் தான் உள்ளது. உடலை கமகமக்க செய்ய என்னவெல்லாம் சந்தையில் புதிதாக வந்திருக்கிறதோ, அவற்றை வாங்கி உடலில் எந்த முக்கிய பாகத்திலும் "ஸ்ப்ரே' செய்வது வாடிக்கையாகி விட்டது. முக்கிய உறுப்புகள் அதனால் பாதிக்கப் படுகிறது என்பதை உணருவதில்லை. இதன் உச்சகட்டம் எது தெரியுமா? திருமணம் ஆனதும் மலட்டுத்தன்மை தெரியவரும் போது தான்.
* பிளாக் டீ ஏன்
அதென்ன பிளாக் டீ… ? கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. வாங்கி குடித்துத்தான் பாருங்கள். அதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய் அண்டவே அண்டாது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க உடலில் உள்ள கணையத்தில் இன்சுலின் சீராக சுரக்க வேண்டும். அது தான் சர்க்கரை அளவை சீராக்கும். ரத்தத்தில் சேர விடாது. இந்த வேலையை பிளாக் டீயில் உள்ள, திப்ளாவின்ஸ், தியாருபிகின்ஸ் ஆகிய ரசாயன கலவைகளும் செய்கின்றன.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!




விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்:


1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.


***


இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :


1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்

2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா

3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து

4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து

6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு

7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு

9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா


***


மேலும் சில தகவல்கள்:


* திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.

* திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.

* சிறிய மீன்களையே இவை உணவாக உட்கொள்ளும்.

* திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் எண்ணை, ஐரோப்பிய நாடுகளில் விளக்கு எரிக்க பயன்படுகிறது.


* ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.

* வில்லியம் மார்கோனி என்ற அமெரிக்க நீச்சல்வீரர், நீச்சலில் 19 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

* முதலைகளால் இது நீல நிறம், அது பச்சை நிறம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. நிறக்குருடு தன்மை கொண்ட உயிரினம் இது.

* ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.


* அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.


* நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!


* சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!


* அன்னப்பறவை என்றாலே வெள்ளை நிறம்தான் நமக்கு நினைவு வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கருப்பு நிறத்தில் அன்னங்கள் வாழ்கின்றன!


* ஒரே மரத்தில் ராபின் பறவையும், அணிலும் சேர்ந்தே வாழும்.


* மைசூரிலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலுள்ள உயரமான நீர் வீழ்ச்சியாகும்.


* உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்கள் உள்ளன.

* இந்தியாவின் முதல் செல் தொலைபேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.


* அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.


* திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு
நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.


* இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர், எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.


* மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.


* லீவென் ஹாக் என்பவர் பாக்டீரியாவை 1682-ம் ஆண்டில் கண்டறிந்தார்.


* வில்லியம் ஹோவர்த் என்பவர் கார்ட்டூன் படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.


* மெக்சிகோ நகரம் ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்குகிறது.


* அன்னத்தின் அறிவியல் பெயர்? - சிக்னஸ் அட்ராடஸ்.


* பிரமிடுகளில் மிகப்பெரியது? - குபு.


* சம்பா நடனம் புகழ்பெற்று விளங்கும் நாடு? - பிரேசில்.


* பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய உயிரினம்? - தும்பி.


* வாசனை பொருள்களின் ராணி? - ஏலக்காய்.

* ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது அணுகுமுறைகளும், ஆட்சிமுறையும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தனிப்பட்ட முறையில் நற்குணங்கள் பல நிரம்பியவர்.

ஹிட்லர், மாவீரன் நெப்போலியனின் தீவிர ரசிகர். பிரெஞ்சு மன்னான நெப்போலியனின் வெற்றி ரகசியங்களை கண்டு வியந்தார். நெப்போலியன் உபயோகித்த அலங்கார நாற்காலியில்
அமர்ந்துதான் ஹிட்லர் தனது பணிகளை கவனித்து வந்தாராம்.


* ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.


* பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.


* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.


* வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.


* மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் தீவிரமாக சிந்திக்கும் போது சில சமயம் உறங்கி விடுவார். அப்படி உறங்கிய போது கணிதப் பிரச்சினைகள், இயற்கை அமைப்பு சம்பந்தமான சில பிரச்சினைகளுக்குரிய விடைகளை கனவுகள் மூலம் அறிந்து கொண்டாரம்.


* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் ராணுவ வீரர்கள் போல் அணிவகுத்து செல்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், விடை பலருக்கு தெரிவதில்லை. எறும்புக்கு பார்வைத்திறன் குறைவு. எனவே எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓர் எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொடர் கிறது.


* பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது.


* நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.


* ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.


* தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.


* விதையில்லாத பழ வகை? - அன்னாசி.


* உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.


* ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம்? - 10 மில்லியன் ஆண்டுகள்.


* தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம்? - கன்னியாகுமரி.


* ஆசியா கண்டத்தில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு சீனா. 44.5 சதவீத பெண்கள் இங்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசியாவில் படித்த பெண்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.


* அமெரிக்கர்களுக்கு தொலைபேசி இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர்
தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.


* ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பணுக்கள் உள்ளன. ஒரு சிவப்பணு இறந்ததும் புதிய சிவப்பணு தோன்றிவிடும்.


* திமிங்கலங்கள் விலங்கினத்தை சேர்ந்தவை.