tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 25 November 2011

ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை : "ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை தி.நகரில் இயங்கி வரும் மகாலெட்சுமி கலாச்சார மையத்தில், ரம்மி விளையாடியதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்க‌ளை விடுதலை செய்யக் கோரி அந்த மையம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், ரம்மி சூதாட்டமல்ல என்றும், அது அறிவை வளர்க்கும் விளையாட்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment