tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday 28 December 2011

புது பஸ்கள் வாங்க ரூ.345 கோடி ஒதுக்கீடு


அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது : 6 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பஸ்கள் மற்றும் 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய பஸ்கள் ஆகியவற்றிற்கு பதிலாக புதிதாக 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் முதல் கட்டமாக 520 பஸ்கள் வாங்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; தற்போது தமிழக அரசின் நிதி நிலையை சரியாக இல்லாததால் வாகன பாடி எனப்படும் அடிசட்டம் மற்றும் இன்ஜின்கள் ஆகியவற்றை 1450 பஸ்களுக்கு பழுது பார்க்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment