tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Sunday 22 January 2012

சமாதானத்தை கட்டியெழுப்புவதே இலங்கை பயணத்தின் நோக்கம்: அப்துல் கலாம்


சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலங்கை பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012 ஐ இலங்கைஅரசு பிரகடனப்படுத்தியுள்ளது.இப் பிரகடனத்த்தின் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார்.இணக்கம் மற்றும் செழிப்புக் கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம், எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்னைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை எனத் தெரிவித்தார்.நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள அப்துல் கலாம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment