tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday 23 January 2012

ராகுல் பொதுக்கூட்டத்தில் ஷூ வீச்சு

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல், இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் தன்னை தடுத்து நிறுத்துவிட முடியாது என்றார்.

ஒரு ஷூவை வீசுவதன் மூலம் என்னைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்றும், நான் ஓடிவிடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடிவிட மாட்டேன் என்று ராகுல் தெரிவித்தார்.

உத்தரகண்ட் பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். மீண்டும் இங்கு ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment